கருணாகரப் பிள்ளையார் கோவில் வரலாறும் மகத்துவமும்.
அல்லல்போம் வல்லினைபோம் அன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம் நல்ல
குணமதிகாமாம் கருணைக் கோபுரத்தூண் மேவும்
கணபதியைக் கதைாழுதக்கால்.
ஓங்கார மூர்த்தியாகிய விநாயகப்பொருமானின் திருப்பாதங்களை நினைத்துக்
கைகூப்பித் தொழுதால், துன்பம், தீவினை, தாய்வழித் தொல்லை, நீங்காத துயரம்
இவைகள் யாவும் நீங்கி நன்னமயதிகாமம் தொழுவார் துயர் நீக்கும்
சர்வவல்லமையும் பொருந்திய கருணாகரப் பிள்ளையாரைத் கைதொழும் அடியர்களது
துன்பம் யாவும் பகலவனைக் கண்ட பனிபோலப் பறந்தோடிவிடும்.
நல்லவரங்களும் கல்விப் பெருக்கும் சித்திக்கும்.
"நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்."
என்ற உமாபதியாபர் வாக்கு நன்கு சிந்திக்க வேண்டியது. நினைப்பவர் மனம்
கோயிலாய்க் கொள்ளும் விக்கினேஸ்வரப் பெருமான் திருவருள் ஒருவருக்கு
கைகூடுமானால் அவருக்கு எவ்விதத் துன்பங்களும் இல்லையாம்.
" எப்போதகத்தும் நினைவார்க் கிடரில்லைக்
கைப்போதகத்தின் கழல்"
இறைவனின் அளவுகடந்த ஆற்றல்களில் அடியார்கிளன் இடையூறை அகற்றி ஆளும் ஆற்றலும்
ஒன்றாகும். இவற்றால் மிக்கிருப்பவரே விக்கினேஸ்வரன். தனக்கு மேலே ஒரு தலைவர்
இல்லாத பெருமையுடையவராதலின்
விநாயகக் கடவுள் என்றும் பெயர் பெறுகிறார். கருணாகரப் பிள்ளையாரும் தமக்கு
மேலே ஒரு தலைவரின்றி ஆன்ம கோடிகளின் இடையூறுகளைப் போக்கி இரட்சிக்கின்றார்.
ஆலயவரலாறு...
பல்வகைச் செல்வங்களும் மலிந்து விளங்கும் யாழ்ப்பாணப்பதியில் கற்பகமெனக்
கோயில் கொண்டெழுந்தருளியிருக்கின்றார் கருணாகரப்பிள்ளையார்.
உரும்பிராய்ப் பதியின் மேற்கு எல்லையில் சைவாசாரம் மிக்கவர்களும்,
விருந்தோம்பும் சிறப்பை இயல்பாகப் பொருச்தியவர்களும், இசைவல்லுநர்களும்
நிறைந்து விளங்கும் இணுவில்ப் பதியின் கிழக்கே மருத நிலங்களாலும்,
சோலைகளாலும் சூழப்பட்டு அமைந்திருக்கின்றது கருணாகரப் பிள்ளையார் ஆலயம்.
ஆலயம் இருக்கும் குறிச்சி பரத்தைப் புலம் எனப்படும்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் அரசனான வி்ஜயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்தில்
தோன்றிய பூர்வ ஆலயங்களில் இதுவும் ஒன்று என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.
பலவித மரங்களும் அடர்ந்து சூழ்ந்து இருந்த இவ்விடத்தில் ஓர் அரசமரத்தின்
கீழ் ஒரு பிள்ளையார் இலிங்கம் இருந்ததாகவும். அது தோன்றிய காலம் எவருக்கும்
தெரியாதென்றும் கூறுவர்.
பாட்டசாரிகளும், கிராமவாசிகளும் இந்த இலிங்கத்தைப் பூசித்து
வழிபட்டனரென்றும், அந்த வழியால் ஆசிரய பரிவத்தனஞ் செய்து வந்தவரான கூழங்கைச்
சக்கரவர்த்தி இலிங்கத்தையும், எழில் நிறைந்த காட்சிகளையும் கண்டு அந்த
இலிங்கத்தையுப் பூசித்து பெரும் பேறு பெற்றாரென்றும், அதனால் பெரு
மகிழ்ச்சியுடையவராய்ச் செங்கற்களால் ஆன ஆலயம் ஒல்லாந்தரால்
தகர்க்கப்பட்டதென்றும், பின் குழைமண் கொண்டு கருணாகரர் என்றும் பெருடைய
ஐயரவர்கள் அதனைப் புதுப்பித்துஅமைத்தார் என்றும் கர்ண பரம்பைரையாய்ப்
பேசப்பட்டு வருகிறது.
கருணாகரப் பிள்ளையாருக்கும் கருணாகரத் தொண்டைமானுக்கும் நெருங்கிய
சம்பந்தமுண்டென்றும் மிகமிகப் பழமையான ஆலயம் இதுவென்றும் கூறுவர்.
அந்தணர் பரம்பரை
கருணாகர ஐயர் பரம ஐயர் அப்புக்குட்டி ஐயர் முதலானோர் இவ்வாலய வளர்ச்சிக்கு
உறுதுணையாயிருந்தார்கள். பிரம்ம அப்புக்குட்டி ஐயர் அவர்கள் காலத்தில்
மகாமண்டபம் நிருத்த மண்டபம் தம்பமண்டபம் என்பன அமைக்கப்பெற்றன. அக்காலங்களிலும் நித்திய நைமித்திய பூஜைகள்
ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1910ம் ஆண்டு ஆவணி மாதம் 20ம் தேதி பெரியாரும் பிரபல வைத்தியருமான வைரவநாதர் வல்லிபுரம் என்பவர் கொடி
ஸ்தம்பம் ஒன்றினைச் செய்து கொடுத்ததுடன் விழாவையுமேற்று நடத்தி வந்தார்.
அன்று தொடக்கம் ஆவணிச் சஷ்டியில் துவஜாரோகணத்துடன் விழா ஆரம்பமாகி மகோற்சவங்கள் நடைபெற்று
வருகின்றன.
பொற்காலம்
அப்புக்குட்டி ஐயரவர்களது சிரேஷ்ட புத்திரரே வைத்தீஸ்வரக் குருக்கள். (சின்னையா)
அவர்கள். கருணாகரப்பிள்ளையார் ஆலய வளர்ச்சியில் பிரம்ம வைத்தீஸ்வரக்
குருக்கள் காலம் பொற்காலமாகும். பெரிய நீதிமானான வைத்தீஸ்வரக் குருக்கள் சிறந்த
கல்விமான் ஆவார்.

தற்போது கருணாகரப் பிள்ளையார் கோவில் மஹேற்சவம் நடைபெற்று வருகின்றது.
எனவே அதன் வரலாற்றை சுமந்து வருகின்றது.
